/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு
ADDED : ஆக 12, 2024 10:26 PM

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியம் வயலுார் அடுத்துள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட கிளாய். இப்பகுதியிலுள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பி, வெளியேறி உபரி நீர் ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கு செல்கிறது.
பின் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து பிள்ளைப்பாக்கம், குன்றத்துார் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக செல்கிறது.
இதில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் பகுதி வழியாக செல்லும் கால்வாய் புதர் சூழ்ந்து கிடப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரி நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும்உபரிநீர் கால்வாயைசீரமைத்தனர்.