sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்

/

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உறவினர்கள் மறியல்


ADDED : மே 11, 2024 09:55 PM

Google News

ADDED : மே 11, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி ரேவதி, முத்தியால்பேட்டை அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தன் குடும்பத்தாருடன், கோவைக்கு சுற்றுலா சென்று, காஞ்சிபுரத்திற்கு நேற்று, காலை 8:20 மணி அளவில், ரயிலில் திரும்பி உள்ளார்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் போது, அதே ரயில் நிலையத்தில் காத்திருந்த சென்னைக்கு செல்லும் பயணியர் வேகமாக ரயிலில் ஏற முயன்றதால், சண்முகம் குடும்பத்தினர் ரயில் நடைமேடையில் விழுந்து விட்டனர்.

கீழே விழுந்தவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைக் கண்டித்து, ரேவதி குடும்பத்தினரின் உறவினர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us