sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு

/

ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு

ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு

ஈஸ்வரர் கோவிலில் அகற்றிய அரச மரம் மறு நடவு


ADDED : ஜூன் 21, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ராஜவீதியில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ், அருணாசல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதன் காரணமாக கோவிலையொட்டி இருந்த 25 ஆண்டுகால அரசமரம், அகற்ற தீர்மானிக்கப்பட்டது.

அந்த மரத்தை வாலாஜாபாத், சாய் கார்டன் பகுதியில் மறு நடவு செய்ய 4வது வார்டு, பேரூராட்சி உறுப்பினர் வெங்கடேசன் தீர்மானித்தார்.

அதன்படி, விதைகள் தன்னார்வ அமைப்பு உதவியுடன் அந்த அரச மரத்தை பெயர்த்தெடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாய் கார்டன் பகுதிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

அங்கு அந்த மரத்தின் அளவு தேவைக்கேற்ப ஆழம் கொண்ட குழி தோண்டி, அதில் இயற்கை உரம் மற்றும் மருந்து கரைசலை தெளித்து அரசமரம் மறு நடவு செய்யப்பட்டது.

அகற்றப்பட்ட மரம் இப்பகுதியில் மறுநடவு செய்ததை அப்பகுதியினர் வரவேற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us