sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

/

ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் குடியிருப்போர் நலச்சங்கம் குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 05, 2024 09:54 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடில் உள்ள 43வது வார்டு அதியமான் நகருக்கு உட்பட்ட சம்பந்தமூர்த்தி அவென்யூவில், இரட்டை கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில், 23 அடி சாலையை ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்சாலை நகர ஊரமைப்பு துறையின் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சாலையில் கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதை அகற்றி மாநகராட்சி வாயிலாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, அதியமான் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் முதல்வர் தனிப்பிரிவு, காஞ்சிபுரம் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு மனு அனுப்பினர்.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு செய்து, அதியமான் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், ஜனவரி 29ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார்.

அதில், உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறப்பட்டு இருந்தது.

பதில் மனு அனுப்பி ஆறு மாதங்களுக்கு மேலாகியும், ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என, நலச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us