/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
/
மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
ADDED : ஆக 06, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:முத்தியால்பேட்டை கீழத்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், 24வது ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.விழாவை முன்னிட்டு, ஆக., 2ம் தேதி, காலை 10:00 மணிக்கு குளக்கரையில், ஜலம் திரட்டும் நிகழ்ச்சி.
அதே தினம் பிற்பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
பிற்பகல், 1:00 மணிக்கு, முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கூழ்வார்த்தனர்.இரவு 10:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.