/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
/
சாலையில் தேங்கும் நீரால் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 30, 2024 12:15 AM

ஊவேரி:ஊவேரி ஊராட்சியில், புத்தேரி காலனி துணை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஏரிக்கரை செல்லும் சாலைக்கு, சிமென்ட் சாலை போடப்பட்டு உள்ளது.
இந்த சாலை வழியாக வயல்வெளி மற்றும் மூலப்பட்டு, மணியாட்சி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ஏரிக்கரை சாலை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை ஓரத்தில், சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டியில், கிராமத்தினர் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.
வீணாக வெளியேறும் தண்ணீர், சிமென்ட் சாலை நடுவே தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் கழிவுநீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயமும், நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, புத்தேரி காலனி கிராமத்தில், கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.