/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'டிரிபிள் செஞ்சுரி' அடித்த சாமந்தி பூ
/
'டிரிபிள் செஞ்சுரி' அடித்த சாமந்தி பூ
ADDED : மே 06, 2024 03:29 AM
சென்னை, : தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், சாமந்தி பூக்கள் சாகுபடி நடக்கிறது. மேலும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வரத்து உள்ளது.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் சாமந்தி பூக்கள், மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. இவற்றில், மாலை, சரம் தொடுக்கப்பட்டு விற்கப்படுகிறது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஹிந்து கோவில்களுக்கு, ஐஸ் நிரப்பிய தெர்மாக்கோல் பெட்டியில் வைத்து, அவை ரயில் மற்றும் விமானங்களில் அனுப்பப்படுகிறது. தற்போது, சாமந்தி பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி, ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விலை உயர்வு காரணமாக, சாமந்திக்கு பதிலாக விலை குறைந்த பூக்களை வைத்து, மாலை மற்றும் சரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.