/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை சந்திப்பில் கழிவுநீர்; காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலை சந்திப்பில் கழிவுநீர்; காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலை சந்திப்பில் கழிவுநீர்; காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலை சந்திப்பில் கழிவுநீர்; காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 02, 2024 10:27 PM

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், வி.என்.பெருமாள் தெருவுடன், திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு இணையும் மும்முனை சாலை சந்திப்பில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உள்ளது.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மூன்று நாட்களாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் துர்நாற்றத் துடன் மும்முனை சாலைசந்திப்பில் வழிந்தோடி வருகிறது.
இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, வி.என்.பெருமாள் தெரு, திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம் தெரு மும்முனை சாலை சந்திப்பில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.