
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் உள்ள எஸ்.ஜெ.கே., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 15வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
சாலவாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ்.பி.வி.சக்திவேல் தலைமை வகித்தார். ம.தி.மு.க., மாநில பொதுசெயலர் மல்லை சத்யா, உத்திரமேரூர் கலைமகள் கல்வி குழுமம் தாளாளர் சையத் நசீர் ஆகியோர் பங்கேற்று, கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மழலையருக்கு பரிசு மற்றும் சான்றிழ் வழங்கி பாராட்டினர்.