sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்

/

நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்

நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்

நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் குப்பை தேக்கம்


ADDED : பிப் 23, 2025 12:53 AM

Google News

ADDED : பிப் 23, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, முனிசிப் நாராயணசாமி தெரு வழியாக, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகள், கடந்த ஆண்டுகளில் கால்வாய் பகுதிகளை துார்த்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால், இந்த நீர்வரத்து கால்வாய், நாளடைவில் வாலாஜாபாத் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறியது. தற்போது, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக, கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் பஜார் வீதி அடுத்த முனிசிப் நாராயணசாமி தெருவில், தரைப்பாலத்திற்குள் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீரோடு, குப்பை கழிவுகள் தேக்கமாகி உள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது.

எனவே, வாலாஜாபாத் முனிசிப் நாராயணசாமி தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us