/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலம் வெங்கடாபுரத்தில் அபாயம்
/
தடுப்பு இல்லாத சிறுபாலம் வெங்கடாபுரத்தில் அபாயம்
ADDED : பிப் 25, 2025 01:47 AM

செவிலிமேடு,
காஞ்சிபுரம் மாநகராட்சி, வெங்கடாபுரத்தில் இருந்து செவிலிமேடிற்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் கட்டப்பட்டு உள்ளது.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இந்த சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லை.
மேலும், தெருமின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரத்தில், இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, வெங்கடாபுரம் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.