sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு

/

ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு

ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு

ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு


ADDED : ஏப் 09, 2024 11:25 PM

Google News

ADDED : ஏப் 09, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், ஜெயின், சவுத்ரி, ரெட்டியார் சமூகத்தினரை சந்தித்து, தனக்கு ஆதரவு கோரினார். இந்த சமூகத்தினர் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, வேட்பாளர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள ரெட்டியார், நாயுடு சமூகத்தினரை, நேற்று நேரில் சந்தித்து, உகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது, லோக்சபா தேர்தலில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், ஜெயின், சவுத்ரி சமூகத்தினரை, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், சந்தித்து ஆதரவு கோரினார்.

அப்போது, வேணுகோபால் கூறியதாவது:

பிரதமர் மோடியின் நல்லாட்சி, மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்பதே, எங்களின் விருப்பம் என, ஜெயின், சவுத்ரி சமூகத்தினர் கூறினர்.

மேலும், வலிமையான பாரத நாட்டை உருவாக்க, ஆறு சட்டசபை தொகுதிகளில் இந்த சமூகத்தினர், பிரதமர் மோடிக்கு, துணை நிற்பதாகவும் உறுதியளித்தனர். தொடர்ந்து, தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தெலுங்கு பேசும் நாயுடு மற்றும் ரெட்டியார் சமூக மக்களையும் சந்தித்து, உகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து, ஆதரவு கோரினோம். அவர்களும், எனக்கு, ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, இந்த சமூகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். நான் வெற்றி பெற்றால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, படிப்படியாக நிறைவேற்ற பாடுபடுவேன்.

மேலும், தாம்பரம், பல்லாவரம் சட்டசபை தொகுதி வாலிபர்கள், விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, விளையாட்டு மைதானம் அமைக்கவும், தொகுதியில் இருந்து அதிகப்படியான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us