/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெரு நாய் தொல்லை செரப்பனஞ்சேரியில் அதிகரிப்பு
/
தெரு நாய் தொல்லை செரப்பனஞ்சேரியில் அதிகரிப்பு
ADDED : செப் 27, 2024 11:52 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி கிராமத்தில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
சாலையை மறித்து நிற்கும் நாய்களால், பள்ளி செல்லும் மாணவியர், பெண்கள், முதியோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிப்பதற்காக குரைத்தபடி விரட்டி செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், வண்டலுார் - - வாலாஜாபாத் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, அச்சுறுத்தும் வகையில் சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.