sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி பள்ளியில் கணினி பழுதால் மாணவர்கள் அவதி

/

மாநகராட்சி பள்ளியில் கணினி பழுதால் மாணவர்கள் அவதி

மாநகராட்சி பள்ளியில் கணினி பழுதால் மாணவர்கள் அவதி

மாநகராட்சி பள்ளியில் கணினி பழுதால் மாணவர்கள் அவதி


ADDED : ஆக 12, 2024 10:21 PM

Google News

ADDED : ஆக 12, 2024 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, பட்டா, ஆக்கிரமிப்பு என, 318 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.

முன்னதாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதையில்லா தமிழ்நாடு என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு பேரணியை, சிறு குறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன், துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 320 மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பள்ளியில், கணினி பிரிவு படிக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேவைப்படும் கணினிகள் பல பழுதாகி உள்ளன.

இதனால், கணினி பிரிவு மாணவர்கள் பாதிக்கின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், முதன்மை கல்வி அதிகாரி, இப்பள்ளியில் ஆய்வு செய்து, போதிய கணினி உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.

கணினி வசதிகளை, மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். என குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us