/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் 'அம்ருத்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
/
உத்திரமேரூரில் 'அம்ருத்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
உத்திரமேரூரில் 'அம்ருத்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
உத்திரமேரூரில் 'அம்ருத்' திட்டத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்
ADDED : ஆக 25, 2024 01:05 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக, வெங்கச்சேரி செய்யாற்றில் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து நிலத்தின் கீழ் குழாய் பதித்து, உத்திரமேரூரில் உள்ள ஏழு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அதன் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மேலும், உத்திரமேரூர் ஏரியில் திறந்தவெளி கிணறுகள், தாமரை குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதன் வாயிலாகவும் உத்திரமேரூர் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனினும், கோடைக்காலத்தில் இந்த குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால், உத்திரமேரூர் பேரூராட்சியில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த 'அம்ருத்' திட்டத்தின் கீழ், 20.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:
'அம்ருத்' திட்டத்தில், உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரி செய்யாற்று படுகையில் கூடுதலாக 4 கிணறுகள் மற்றும் அப்பகுதியில், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து பணி நிறைவு பெற்றுள்ளது.
சோமநாதபுரத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வேடபாளையத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான கட்டுமானப் பணியும் நடைபெறுகிறது.
வெங்கச்சேரி செய்யாற்றில் மின்மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், உத்திரமேரூர் சென்றடைய 18 கி.மீ., துாரத்திற்கு, நிலத்தின் கீழ் குடிநீர் குழாய் புதைக்கப்படுகிறது.
இதேபோல, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், குடிநீர் குழாய் புதிதாக பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.