sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

/

மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்

மஞ்சள்நீர் கால்வாய் கட்டுமான பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்


ADDED : செப் 13, 2024 12:26 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.

இக்கால்வாய் மீது, 40 கோடி ரூபாய் செலவில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. இதில், ஒரு பகுதியாக ஆனந்தாபேட்டையில் இருந்து திருக்காலிமேடிற்கு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில், பக்கவாட்டு சுவர் அமைக்க கட்டுமான பணி நடந்து வருகிறது.

சாலையோரம் கட்டுமான பணிக்காக கால்வாயில் பள்ளம் தோண்டப்பட்ட பகுதி, 10 அடிக்கு மேல் ஆழமாக உள்ளது. மேலும், கட்டுமான பணிக்காக குழிகளில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள் நீண்டுள்ளது.

மேலும், பணி நடைபெறும் இடத்தில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சாலையோரம் இரும்பு தடுப்பும் அமைக்கவில்லை.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள், கால்வாய் கட்டுமான பணி நடைபெறுமிடத்தில் சாலையோரம் ஒதுங்கும்போது, பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மஞ்சள்நீர் கால்வாயில் கட்டுமான பணி நடக்கும் இடத்தில், விபத்தை தவிர்க்க சாலையோரம் இரும்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us