/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
/
மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
மஞ்சள்நீர் கால்வாய் சீரமைப்பு பணி தடுப்பு இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : மே 18, 2024 10:59 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள, புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதை தொடர்ந்து ஆனந்தாபேட்டை, மின்நகர், திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாயின் இருபக்கங்களில் புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்க, ஏற்கனவே இருந்த பழைய பக்கவாட்டு சுவர்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த சாலையோரம் உள்ள கால்வாய்க்கு பக்கவாட்டு தடுப்புச்சுவர் அகற்றியபின், கால்வாயோரம் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்காததால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட கால்வாய் ஓரம் ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழும் சூழல் உள்ளது.
கடந்த வாரம், இச்சாலையில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியர் கால்வாய் ஓரம் சென்றபோது, மண் சரிந்து கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்ததாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, வாகன போக்குவரத்து நிறைந்த சாலையோரம், மஞ்சள்நீர் கால்வாய்க்கு, தற்காலிக சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

