sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

/

 ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

 ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

 ரூ.39.20 கோடியில் 'ஹஜ்' இல்லம்; ஹிந்து முன்னணி எதிர்ப்பு

52


UPDATED : டிச 17, 2025 05:18 AM

ADDED : டிச 17, 2025 04:19 AM

Google News

52

UPDATED : டிச 17, 2025 05:18 AM ADDED : டிச 17, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு, சென்னை நங்கநல்லுார், ஜி.எஸ்.டி., சாலையில், 'ஹஜ் இல்லம்' கட்ட, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர் வசதிக்காக, சென்னை, ஜி.எஸ்.டி., சாலை, நங்கநல்லுார் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று, முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில், ஹஜ் இல்லத்திற்கு, ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அங்கு, 39.20 கோடி ரூபாயில் ஹஜ் இல்லம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த நிலத்தில் ஹஜ் இல்லம் கட்ட, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை அடிக்கல் நாட்டினார். மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர், தனது பயணத்திற்கு ஒருநாள் முன்பாக, இங்கு கட்டணமின்றி தங்கிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐந்து தளங்கள், 400 அறைகளுடன் அமைய உள்ள ஹஜ் இல்லத்தில் தினசரி, 400 பயணியர் தங்க முடியும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டுமான பணி நிறைவுற்று, ஹஜ் இல்லம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நாசர், அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹிந்து முன்னணி எதிர்ப்பு


தமிழக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: சென்னை சூளை பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், ஹஜ் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. அந்த சாலை வழியாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், சாமி ஊர்வலம் தடுக்கப்படுகிறது. தற்போது, ஹஜ் இல்லம் கட்டப்படும் இடம், பிற்படுத்தப்பட்ட சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசு இடம். ஹிந்துக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, இஸ்லாமியர்களுக்கு வாரி தருவது கண்டிக்கத்தக்கது.
ஹஜ் இல்லம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இஸ்லாமிய குழுக்களின் நிர்வாகத்தில் இருக்கிறது. விமான நிலையம், தென் மாவட்டங்கள் செல்வதற்கான சாலை மார்க்கம், ரயில் தளம், உள்ளூர் ரயில், மெட்ரோ ரயில் என, பல போக்குவரத்து நிறைந்த இடத்தில், ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இது தவிர ராணுவ மையம், முக்கிய அலுவலகங்களும் இங்குதான் உள்ளன.
ஹஜ் இல்லம் கட்டினால், பல பிரச்னைகள் எழும். தி.மு.க.,விற்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கிதான் கண்களுக்கு தெரிகிறது. நங்கநல்லுாரில் ஹஜ் இல்லம் அமைப்பதற்கு ராணுவ அமைச்சகம், தேசிய புலனாய்வு முகமை, விமான போக்குவரத்து ஆணையம், ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும். இதை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான முயற்சிகளை, ஹிந்து முன்னணி முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us