/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் துணை மேயர் வார்டில் நாய்கள் தொல்லை திருக்காலிமேடினர் அச்சம்
/
காஞ்சிபுரம் துணை மேயர் வார்டில் நாய்கள் தொல்லை திருக்காலிமேடினர் அச்சம்
காஞ்சிபுரம் துணை மேயர் வார்டில் நாய்கள் தொல்லை திருக்காலிமேடினர் அச்சம்
காஞ்சிபுரம் துணை மேயர் வார்டில் நாய்கள் தொல்லை திருக்காலிமேடினர் அச்சம்
ADDED : செப் 12, 2024 01:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு உடையார் தெரு, சவுராஷ்டிரா தெரு, கவரை தெரு, பாலாஜி நகர் உள்ளிட்ட தெருக்களில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் வார்டான, இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
சாலையை மறித்து நிற்கும் நாய்களால், இத்தெருக்கள் வழியாக பள்ளி செல்லும் மாணவ- - மாணவியர், பெண்கள், முதியோர், அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிப்பதற்காக குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்கின்றன. குப்பையில் கிடக்கும் உணவுக்காக சண்டையில் ஈடுபடும் நாய்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
தெரு நாய் தொல்லை யால், இப்பகுதியில் வசிப்போர் தெருவில்நடமாட அச்சப்படுகின்றனர்.
குறிப்பாக பணி முடிந்து, இரவில் வீடு திரும்புவோர் நாய்க்கு பயந்தபடியேவீட்டிற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்காலிமேடினர் வலியுறுத்தி உள்ளனர்.