/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை
/
தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை
ADDED : மார் 15, 2025 12:33 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தோண்டாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டில் 90 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி நீரைக் கொண்டு, அப்பகுதியில் உள்ள 130 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த ஏரி கடந்த பல ஆண்டுகளாக துார்வாராததால், நீர் பிடிப்பு பகுதிகள் துார்ந்துள்ளது.
இதனால், மழைக்காலத்தின் போது, ஏரியில் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை இருந்து வருகிறது.
ஏரியில் குறைவான அளவு தண்ணீர் சேகரமாவதால், அத்தண்ணீரைக் கொண்டு இறுதிகட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, தோண்டாங்குளம் ஏரியை துார்வாரி, கரைப் பகுதி மற்றும் மதகுப் பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.