sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது

/

'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது

'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது

'லிப்ட்' கொடுத்தவரிடம் நகை பறிக்க முயன்றோர் கைது


ADDED : மார் 25, 2024 05:59 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : மாதவரம், பொன்னியம்மன்மேடு சீனிவாசா நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; போட்டோகிராபர்.

இவர் நேற்று முன்தினம் இரவு, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், மாதவரம் ஜி.என்.டி., சாலை வழியாக வீட்டிற்குச் சென்றார்.

அப்போது, புனித அன்னாள் மகளிர் கல்லுாரி அருகே, அவரிடம் இருவர், 'லிப்ட்' கேட்டு உள்ளனர்.

அவர்களை ஏற்றி சிறிது துாரம் சென்றதும், அவரை ஒருவன் பிடித்துக்கொள்ள, மற்றொருவன் அவரது செயினை பறிக்க முயன்றான்.

சுதாரித்த ரவிச்சந்திரன், அருகிலுள்ள, 'ஷெல்' பெட்ரோல் 'பங்க்'கில் வாகனத்தை நிறுத்தி, அங்கிருந்தோரை உதவிக்கு அழைத்தார். அதற்குள் இருவரும் இறங்கி தப்பி ஓடினர். உடனே, தன் மகன் அவினாஷ் என்பவருக்கு ரவிச்சந்திரன் தகவல் அளித்தார். தன் நண்பருடன் சென்ற அவினாஷ், மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, மேற்கண்ட இருவரையும் பிடித்து, மாதவரம் போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் செயின் பறிக்க முயன்றது, புளியந்தோப்பைச் சேர்ந்த ஆசிப், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த, 14 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us