sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது

/

எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது

எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது

எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது


ADDED : மார் 10, 2025 02:12 AM

Google News

ADDED : மார் 10, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் முன்விரோதம் காரணமாக, சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை வாயிலாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி போலீசார், சந்தேகம்படும் படி சுற்றித் திரிந்த இருவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்த அருப்பு சங்கர், 38, மண்டை பிரசாந்த், 25, என தெரிந்தது.

இவர்கள், கொலை செய்யப்பட்ட கருப்பா ரகுபதி என்பவரது கூட்டாளிகள் என்பதும், அந்த கொலைக்கு பழிவாங்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

அதேபோல், புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே சூர்யா, 25, என்பவரை கத்தியால் தாக்கிய வழக்கில், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரீகன், 25, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us