/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தக்காளி வரத்து குறைந்ததால் கிலோ ரூ.40க்கு விற்பனை
/
தக்காளி வரத்து குறைந்ததால் கிலோ ரூ.40க்கு விற்பனை
ADDED : செப் 17, 2024 11:54 PM

காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் விளைச்சல் அதிகரித்து, காஞ்சிபுரத்திற்கு வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறி சந்தை மற்றும் நடமாடும் கடைகளில் 6 கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த மாதம் கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்து நடமாடும் கடைகளில் கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த தக்காளி வியாபாரி இ.அருள் கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால், தக்காளி சாகுபடி செய்திருந்த விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஒரு வாரமாக காஞ்சிபுரத்திற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடந்த மாதம் கிலோ 20 ரூபாய்க்கு விற்ற தக்காளியை 40 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.