sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு..

/

நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு..

நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு..

நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் போக்குவரத்து இடையூறு..


ADDED : மே 27, 2024 07:02 AM

Google News

ADDED : மே 27, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தின் பின்புறம், வடக்கு பைபாஸ் சாலையில், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, அப்பகுதிவாசிகள் கொட்டி வருகின்றனர்.

மதுராந்தகம் பகுதி தேசிய நெடுஞ்சாலையின் வடக்கு பைபாஸ், திண்டிவனம் மார்க்கத்தில், ஹோட்டல் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் போன்றவற்றை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர்.

இந்த குப்பை கழிவுகளை சிலர், இரவு நேரத்தில் தீயிட்டு எரித்து விடுகின்றனர். பின், மீண்டும் அதே பகுதியில் குப்பையை கொட்டி வருகின்றனர்.

இதனால், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பயணியர் கண் எரிச்சல், குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப் படுகின்றனர்.

மேலும், கட்டடக் கழிவுகளை சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை அடுத்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, குப்பை அகற்றப்படாமல், அதே பகுதியில் சமன் செய்யப்பட்டன.

தற்போது, மீண்டும் அதே பகுதியில், கட்டடக்கழிவுகள் மற்றும் வேளாண் கழிவுகளை, அப்பகுதியினர் கொட்டி வருகின்றனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை, தரம் பிரிக்கவும், மீண்டும் குப்பை கழிவுகள் கொட்டாதவாறு, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us