sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை சங்கூசாபேட்டையில் நெரிசல்

/

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை சங்கூசாபேட்டையில் நெரிசல்

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை சங்கூசாபேட்டையில் நெரிசல்

ஆக்கிரமிப்பால் குறுகிய சாலை சங்கூசாபேட்டையில் நெரிசல்


ADDED : மார் 11, 2025 12:48 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காந்தி சாலையில் இருந்து, சேக்குபேட்டை, எண்ணெய்க்கார தெரு, ரயில்வே சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு, டூ - வீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சங்கூசாபேட்டை பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்களது கடையை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறுகியுள்ளது.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இச்சாலையில், எதிரெதிர் திசையில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், நெரிசலில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்ல முடியாத சூழல் உள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கூசாபேட்டையை ஒருவழிச் சாலையாக மாற்ற வேண்டும் அல்லது கார், வேன், லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க, போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us