/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ -- வீலர் பார்க்கிங்காக மாறிய ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரம்
/
டூ -- வீலர் பார்க்கிங்காக மாறிய ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரம்
டூ -- வீலர் பார்க்கிங்காக மாறிய ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரம்
டூ -- வீலர் பார்க்கிங்காக மாறிய ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரம்
ADDED : ஆக 18, 2024 11:47 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ராஜகோபுரம் அருகே விசாலமான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிலுக்குள்ளே ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியிலும், கார், டூ - வீலர் உள்ளிட்ட வாகனங்களை பக்தர்கள் நிறுத்துகின்றனர்.
அதையடுத்து, மேலும் சிலர், கோவிலின் உள் பிரகாரம் வரை, டூ - வீலர்கள் நிறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கோவிலின் உள் பிரகாரம் வரை வாகனங்களை கொண்டு செல்லக்கூடாது என, பக்தர்கள் பலரும் கோவில் நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர்.
இதனால், சில மாதங்களுக்கு முன், கோவிலுக்குள் டூ - வீலர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மீண்டும் உள் பிரகாரம் வரை டூ - வீலர்களை பலரும் கொண்டு செல்வதை கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோவிலுக்குள் டூ - வீலர்கள் நிறுத்துவதை, கோவில் அதிகாரிகள் தடுக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

