ADDED : செப் 09, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏகனாபுரம் : மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராம ஏரிக் கரையோரம், திறந்தவெளி கிணறு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், இந்த கிணற்று நீரை, ஏகனாபுரம் கிராமத்தினர் குடி நீராக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, ஏகனாபுரம் கிராமத்தில், ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, திறந்தவெளி கிணறு களின் பயன்பாடு அறவே இல்லை.
இருப்பினும், ஏகனாபுரம் கிராம ஏரிக்கரை சாலையோரம் இருக்கும் திறந்தவெளி கிணற்றால், வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, ஏரிக்கரை சாலையோரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது, திறந்தவெளி கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது.
எனவே, திறந்தவெளி கிணற்று மீது தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.