/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி பிரதான சாலை மற்றும் சுற்றியுளள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் உள்ளது. இக்கால்வாயை முறையாக துார்வாரி பராமரிக்காததால், அரசு துவக்கப் பள்ளி வழியாக செல்லும் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், மழை பெய்தால் கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க, அய்யங்கார்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.