/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 07, 2025 12:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பூந்தோட்ட தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
தரமற்ற கட்டுமானப் பணியால், கால்வாய் கட்டப்பட்ட ஒரு சில ஆண்டிலேயே கால்வாய் சரிந்து விழுந்து சேதமானது. கால்வாயை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், மழைக்காலங்களில் மழைநீரும் கால்வாய் வாயிலாக வெளியேற முடியாத சூழல் உள்ளது.
எனவே, சேதமான கால்வாயை அகற்றிவிட்டு, புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.