sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாசி படர்ந்த புளியம்பாக்கம் குளம் சுத்தப்படுத்த கிராமத்தினர் கோரிக்கை

/

பாசி படர்ந்த புளியம்பாக்கம் குளம் சுத்தப்படுத்த கிராமத்தினர் கோரிக்கை

பாசி படர்ந்த புளியம்பாக்கம் குளம் சுத்தப்படுத்த கிராமத்தினர் கோரிக்கை

பாசி படர்ந்த புளியம்பாக்கம் குளம் சுத்தப்படுத்த கிராமத்தினர் கோரிக்கை


ADDED : ஆக 24, 2024 12:32 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ரயில்வே கேட் அடுத்து கிராமத்திற்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தை, குளித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்றவைக்கு அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இக்குளம் முறையான பராமரிப்பின்மையால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாசி படர்ந்து காணப்படுகின்றன.

சாலையோரம் உள்ள இந்த குளத்து நீரை, கடந்த ஆண்டுகளில் பாதசாரிகள் பலரும் குடிநீராக பயன்படுத்தியதாகவும், தற்போது உபயோகமற்று உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

எனவே, இக்குளத்தின் பாசியை அகற்றி, சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புளியம்பாக்கம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us