sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?

/

புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?

புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?

புலிவாய் அமரன் குளம் தூர்வாரி பராமரிக்கப்படுமா?


ADDED : ஆக 15, 2024 10:48 PM

Google News

ADDED : ஆக 15, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் கிராமத்தில், விவசாய நிலங்களையொட்டி 1 ஏக்கர் பரப்பில் அமரன் குளம் உள்ளது.

இந்த பொதுக்குளத்தை சுற்றி, 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் நவரை பருவத்திற்கு ஏரி பாசனம் மற்றும் சொர்ணாவாரி பட்டத்திற்கு கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். கோடைக்காலத்தின் போது, இப்பகுதி விவசாய நிலங்களுக்கு அருகாமையில் உள்ள அமரன் குளம் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

அமரன் குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், குளம் முழுமையாக துார் வாராமல் கரைப்பகுதி மட்டும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், இக்குளத்தில் போதுமான தண்ணீர் தேக்கமின்றி வறண்டு காணப்படுகிறது.

எனவே, புலிவாய் கிராமத்தில் உள்ள அமரன் குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, நீர் வரத்து கால்வாய் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us