sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரிக்கரையின் கீழுள்ள சாலைக்கு விடிவு வருமா?

/

ஏரிக்கரையின் கீழுள்ள சாலைக்கு விடிவு வருமா?

ஏரிக்கரையின் கீழுள்ள சாலைக்கு விடிவு வருமா?

ஏரிக்கரையின் கீழுள்ள சாலைக்கு விடிவு வருமா?


ADDED : மே 03, 2024 12:46 AM

Google News

ADDED : மே 03, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் கீழ் உள்ள மண் சாலையை, தார் சாலையாக அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை, பூந்தமல்லி அருகே மேப்பூர் முதல் குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் வரை, 8 கி.மீ., துாரத்திற்கு அமைந்துள்ளது.

இந்த கரைக்கு கீழ், மண் சாலை உள்ளது. இந்த சாலை வழியே செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நீரேற்றும் நிலையம், பொதுப்பணி துறை அலுவலகம், குன்றத்துார், சிறுகளத்துார் பகுதிகளுக்குச் செல்ல முடியும்.

பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, பராமரிப்பின்றி உள்ளது. மேம்பூர் முதல் குன்றத்துார் வரை இந்த சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைத்தால் குன்றத்துார், சிறுகளத்துார், மேப்பூர், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை பகுதிகளுக்கு, வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியும்.

எனவே, இந்த சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us