sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்

/

ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்

ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்

ஏர் - இந்தியா எக்ஸ்பிரசில் இனி வாரணாசிக்கு பறக்கலாம்


ADDED : மார் 01, 2025 12:06 AM

Google News

ADDED : மார் 01, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் இருந்து பீஹார் மாநிலம் பாட்னா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு, தினசரி விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்க உள்ளது.

சென்னையில் இருந்து பாட்னா மற்றும் வாரணாசிக்கு இடையே தினசரி விமானங்களை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனம் இயக்கி வருகிறது. பயணியரும் தினமும் அதிகளவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து பாட்னா மற்றும் வாரணாசி இடையே, தினசரி விமானங்களை மார்ச் 30ம் தேதி முதல் இயக்க ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இருந்து பாட்னாவுக்கு தினசரி காலை 6:00 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:50 மணிக்கு பாட்னா சென்றடையும். பாட்னாவில் இருந்து காலை 9:20 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12:10 மணிக்கு சென்னை வந்தடையும். இதேபோல் வாரணாசிக்கு சென்னையில் இருந்து தினசரி மதியம் 2:00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4:40 மணிக்கு வாரணாசி வந்தடையும்.

வாரணாசியில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 7:55 மணிக்கு சென்னை வந்தடையும்.






      Dinamalar
      Follow us