ADDED : மே 13, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம் : மணப்பாக்கம் அருகே ஒழலுார் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 20. இவர், நேற்று மதுராந்தகம் மார்க்கத்தில், செங்கல்பட்டு நோக்கி அவருக்கு சொந்தமான பல்சர் இருசக்கர வாகனத்தில், மாமண்டூர் பாலாற்று பாலத்தின் மீது சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம், சக்திவேல் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், சக்திவேலின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.