sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்

/

மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்

மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்

மையத்தடுப்பில் மோதிய மினி பஸ் குன்றத்துாரில் 10 பேர் படுகாயம்


ADDED : பிப் 18, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 18, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : குன்றத்துார், ஆகாஷ் நகரை சேர்ந்த ஸ்ருதி, 26, என்பவருக்கும், வேலுார் மாவட்டம் குடியாத்தம்பகுதியை சேர்ந்த வெங்க டேசன், 29, என்பவருக்கும்,நேற்று முன்தினம் குடியாத்தத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், குன்றத்துார், கோவூர் பகுதிகளை சேர்ந்தபெண்ணின் உறவினர்கள்பங்கேற்றனர். பின்,தனியார் 'டிராவல்ஸ்' நிறுவன மினி பேருந்தில், 50 பேர் குன்றத்துார் திரும்பிவந்தனர்.

பேருந்தை வினோத், 40, ஓட்டிச் சென்றார். ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார்செல்லும் நெடுஞ்சாலையில், குன்றத்துார் அருகே சிறுகளத்துார் பகுதியை, நள்ளிரவு 12:30 மணிக்கு பேருந்து கடந்த போது, சாலையின் குறுக்கேதுவங்கும் மையத்தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில், பேருந்தின்முன்பகுதி சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த 9 பெண்கள், ஒரு ஆண் என, 10 பேர் காயமடைந்தனர்.

இவர்களை, குன்றத்துார்போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

எச்சரிக்கை பலகை அவசியம்

நெடுஞ்சாலையில், பல இடங்களில் மையத்தடுப்பு துவங்கும் பகுதியில் எச்சரிக்கை பலகை, இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கப்படுவதில்லை.இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், சாலையின் குறுக்கே திடீரென துவங்கும் மையத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன.எனவே, நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு துவங்கும் இடங்களில், அறிவிப்பு பலகை, ஒளிர் பட்டைகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us