sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரூ.400 கோடி இழப்பீடு தந்து 1,000 ஏக்கர் நிலம் பதிவு

/

ரூ.400 கோடி இழப்பீடு தந்து 1,000 ஏக்கர் நிலம் பதிவு

ரூ.400 கோடி இழப்பீடு தந்து 1,000 ஏக்கர் நிலம் பதிவு

ரூ.400 கோடி இழப்பீடு தந்து 1,000 ஏக்கர் நிலம் பதிவு


ADDED : நவ 05, 2025 01:25 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: 'பரந்துார் பசுமை விமான நிலைய திட்டப்பணிக்காக, 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது' என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் அமைய உள்ளது.

இதில் 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது; திட்ட மதிப்பு 29,150 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

பரந்துார் - ஏ, பரந்துார் - பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய 20 கிராமங்கள், இதற்கான இடங்களை வழங்க உள்ள ன.

இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன. எதிர்ப்பு போராட்டம் ஒருபுறம் நடக்கும் நிலையில், திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை வருவாய் துறை, 21 யூனிட்கள் வாயிலாக தீவிரமாக மேற்கொள்கிறது.

நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலைய திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.

கடந்த ஜூலை 9ம் தேதி, பரந்துார், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர், தங்கள் நிலங்களை முதன்முதலாக வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர், தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்தும் பணி முடிந்துவிட்டதாக, வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதற்காக, இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகள் தொடர்கின் றன.






      Dinamalar
      Follow us