sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மேல்கதிர்பூரில் கருகி வீணாகும் 1,000 மரக்கன்றுகள்

/

மேல்கதிர்பூரில் கருகி வீணாகும் 1,000 மரக்கன்றுகள்

மேல்கதிர்பூரில் கருகி வீணாகும் 1,000 மரக்கன்றுகள்

மேல்கதிர்பூரில் கருகி வீணாகும் 1,000 மரக்கன்றுகள்


ADDED : மார் 21, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் பெரிய ஏரிக்கரையோரம், பறவைகளுக்காக 2,000 மரக்கன்றுகள் நடவு செய்து குறுங்காடு அமைக்க தமிழ்நாடு வனத்துறை மற்றும் பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்தனர்.

அதன்படி, 2023ம் ஆண்டு, நவ., 19ம் தேதி, ஏரிக்கரை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நீர்மருது, புங்கன், வேம்பு, நாவல், இலுப்பை, கொடுக்காப்புளி, அத்தி, அரசு உளிட்ட 1,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச, 28 இடங்களில் தன்னார்வலவுடன் இணைந்து குழாய் அமைத்து வனத்துறை முறையாக தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பராமரித்து வந்தனர். இதனால், இம்மரங்கள் 8 - 10 அடி உயரத்திற்கு செழித்து வளர்ந்து வந்தன.

இந்நிலையில், மரங்களை பராமரிக்க போதுமான நிதி இல்லை என்ற காரணத்தை கூறி மரக்கன்றுகளை மேல்கதிர்பூர் ஊராட்சி நிர்வாகம்தான் பராமரிக்க வேண்டும் என, கடந்த ஆண்டு ஜூலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகமும் மரக்கன்றுகளை பாதுகாக்க, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும், மரக்கன்றுகளை பாதுகாக்க பணி ஆட்களை நியமிக்கவில்லை என கூறப்படுகிறது.

நன்கு செழித்து வளர்ந்து வந்த மரக்கன்றுகள் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கருகி வருகின்றன. பறவைகளின் உணவுக்காகவும், சரணலாயத்திற்காகவும், குறுங்காடுக்காக நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் கருகி வீணாகி வருகின்றன.

எனவே, மேல்கதிர்பூர் கிராமத்தில் பராமரிப்பு இல்லாததால் கருகி வரும் மரக்கன்றுகளை முறையாக தண்ணீர் ஊற்றி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் கூறியதாவது:

மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் நடவு செய்யப்பட்டுள்ள 1,200க்கும் மேற்பட்ட மரங்களில், 200க்கும் மேற்பட்ட மரங்கள் கருகி விட்டன. எங்களிடம் போதுமான தன்னார்வலர்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து எங்களால் பாதுகாக்க முடியவில்லை.

மீதமுள்ள மரங்களை பாதுகாக்க, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக மரகன்றுகள் மரமாகும் வரை, முறையாக பராமரிக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us