sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பழநி ஆண்டவர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

/

பழநி ஆண்டவர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

பழநி ஆண்டவர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

பழநி ஆண்டவர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்


ADDED : நவ 04, 2024 03:38 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலிலில். 15ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா, கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்று மாலை விநாயகர் வீதியுலா நடந்தது.

இரண்டாள் நாளான நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து தாருகாசூரன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது.

மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை மூலவர் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, பம்பை, தவில், நாதஸ்வரம் வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர் சுரேஷ், தனது உடலில், 108 வேல் தரித்து முன்னே சென்றார்.

பெண்கள் 108 பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழநி ஆண்டவர் கோவில் சென்றனர்.

தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.

நான்காம் நாள் உற்சவமான இன்று காலை 11:00 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், அக்னி முகன் வதம் செய்யும் நிகழ்வும் நடக்கிறது. வரும் 7ம் தேதி இரவு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் விமரிசையாக நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us