sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

/

15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு


ADDED : ஆக 25, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில், தெருக்கூத்து, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட 15 கலைஞர்களுக்கு, கைத்தறி துறை அமைச்சர் காந்தி விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் சென்னை மற்றும் தமிழகதின் எட்டு நகரங்களில், சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக காஞ்சி புரம் கலெக்டர் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

கிராம நடனம், கரகம் என பல வகையிலான நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - -எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் ஹேமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலையில் சாதனை படைத்ததாக, நாடக கலைஞர் சண்முகம், வீணை கலைஞர் ரங்கராஜன், கைச் சிலம்பாட்ட கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு கலை முதுமணி விருது, தெருக்கூத்து கலைஞர் பாபு, நாதஸ்வர கலைஞர் சுப்ரமணியம், புலியாட்ட கலைஞர் தேவராஜ் ஆகியோருக்கு கலை நன்மணி விருது, கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

மேலும், வில்லிசை கலைஞர் முருகன், தவில் கலைஞர் சண்முக முரளி, ஓவிய கலைஞர் கீதா ஆகியோருக்கு கலை சுடர்மணி விருது, தெருக்கூத்து கலைஞர் நந்தகுமார், பம்பை கலைஞர் மணிகண்டன், பரதநாட்டிய கலைஞர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு கலை வளர்மணி விருது வழங்கினார்.

கைச் சிலம்பாட்ட கலைஞர் சிவசெல்வன், குரலிசை கலைஞர் சபரீஷ்வர், சிலம்பாட்ட கலைஞர் ஷாலினி ஆகியோருக்கு கலை இளமணி விருது என, 15 பேருக்கு விருது மற்றும் காசோலைகளையும் அமைச்சர் காந்தி வழங்கினார்.






      Dinamalar
      Follow us