sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

/

காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்


ADDED : நவ 02, 2024 12:45 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பை, கழிவுகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள், இரு நாட்களாக தனி கவனம் செலுத்தி வந்தது.

வெடி மருந்துகள் நிறைந்த பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வழக்கமாக சேகரிக்கும் குப்பை, கழிவுகளை தனியாகவும், பட்டாசு கழிவுகளை தனியாகவும் அகற்றியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், அன்றாடம் 80,000 கிலோ குப்பை, தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மாநகராட்சியின், 51 வார்டுகளிலும் பட்டாசு கழிவுகள் ஏராளமாக சேர்ந்தன.

இவற்றை, தீபாவளியன்று காலை முதல், நேற்று மாலை வரை என, இரு நாட்கள் தொடர்ந்து அகற்றினர். அவ்வாறு, தீபாவளி பண்டிகை அன்று, 6,000 கிலோ பட்டாசு கழிவுகளும், நேற்று 11,000 கிலோ என, மொத்தம் 17,000 கிலோ பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் தனியாக குவிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us