sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 வங்கதேசத்தினர் கைது

/

சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 வங்கதேசத்தினர் கைது

சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 வங்கதேசத்தினர் கைது

சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 வங்கதேசத்தினர் கைது


ADDED : ஜூலை 24, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:மாங்காடு அருகே, வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறி தங்கியிருந்த 19 பேருக்கு, மூன்று மாத சிறை தண்டனை விதித்து, ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாங்காடு அருகே, சட்ட விரோதமாக குடியேறி, வசித்து வந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த, ஒன்பது ஆண் மற்றும் 10 பெண்களை, மாங்காடு போலீசார் கடந்த ஏப்.,29ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில், வங்கதேசத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக குடியேறி தங்கியிருந்தது உறுதியானதை அடுத்து, வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேருக்கு, 3 மாதம் சிறை மற்றும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி விக்னேஷ் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us