ADDED : டிச 11, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு சாலை நடுவே கூட்டமாக படுத்திருந்த மாடுகளின் மீது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு கன்றுகள் பலியாயின.
மாட்டின் உரிமையாளர்கள் யாரும் உரிமை கோரி வராததால், செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வருவாய் ஆய்வாளர் அலுலகம் எதிரே, பலியான கன்றுகள் போடப்பட்டுள்ளன.
சாலையில் நடுவே படுத்து உறங்கும் மாடுகளை பிடிக்க , மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

