sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்' 

/

தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்' 

தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்' 

தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்' 


ADDED : அக் 11, 2025 08:14 PM

Google News

ADDED : அக் 11, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 231 மாணவ - மாணவியர், தமிழ் திறனறி தேர்வு எழுத வரவில்லை என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 அரசு உயர்நிலைப்பள்ளி, 51 மேல்நிலைப்பள்ளி, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 121 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், 40,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியருக்கு நேற்று, தமிழ் திறனறி தேர்வு, தமிழகம் முழுதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 தேர்வு மையங்களில், 4,910 பேர் திறனறி தேர்வு எழுத ஒதுக்கீடு செய்தனர்.

இதில், 4,679 மாணவ - மாணவியர் தமிழ் திறனறி தேர்வு எழுதினர். மீதம், 231 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இவர்களுக்கு, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை கிடைக்காது என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us