ADDED : ஏப் 13, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மருத்துவன்பாடி ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருப்புலிவனம் ஏரிக்கரை அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, 24; அரவிந்தன், 22, ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர்.
இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட 1.6 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல, கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, 1,300 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி, 31, என்பவரை உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.

