sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

30 வகையான மீட்பு பொருட்கள் தீயணைப்பு துறைக்கு வழங்கல்

/

30 வகையான மீட்பு பொருட்கள் தீயணைப்பு துறைக்கு வழங்கல்

30 வகையான மீட்பு பொருட்கள் தீயணைப்பு துறைக்கு வழங்கல்

30 வகையான மீட்பு பொருட்கள் தீயணைப்பு துறைக்கு வழங்கல்


ADDED : ஜூலை 10, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:மத்திய அரசின், 'ஆப்தமித்ரா' திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 30 வகையான மீட்பு பொருட்களை, தீயணைப்பு துறையினருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பேரிடர் அவசர காலங்களில் உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

தீயணைப்பு துறையினருக்கு, மத்திய அரசின்ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ், மீட்பு உபகரணங்கள்வழங்க, காஞ்சிபுரம்மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை முடிவு செய்தது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், உயிர் காக்கும் மிதவைகள், துடுப்புகள், நங்கூரம், எமர்ஜென்சி லைட், வெல்டிங் கருவிகள் அடங்கிய பெட்டிகள், அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட மொத்தம் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 வகையான மீட்பு பொருட்களை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் அப்துல் பாரி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us