sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

3,000 மதுபாட்டில்கள் குருவிமலையில் அழிப்பு

/

3,000 மதுபாட்டில்கள் குருவிமலையில் அழிப்பு

3,000 மதுபாட்டில்கள் குருவிமலையில் அழிப்பு

3,000 மதுபாட்டில்கள் குருவிமலையில் அழிப்பு


ADDED : ஜன 26, 2024 01:23 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, எரிசாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 2022, 2023ம் ஆண்டுகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சோதனையிட்டு ஏராளமான சட்ட விரோத மதுபானங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

அவ்வாறு பறிமுதல் செய்த மதுபானங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 315 லிட்டர் எரிசாராயம், 3,000 போலி பிராந்தி பாட்டில்களை, காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் வாயிலாக குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us