sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன

/

 சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன

 சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன

 சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன


ADDED : டிச 11, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த நான்கு மாடுகளை, நகராட்சி அதிகாரிகள் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் ஒப்படைத்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவதுடன் சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அவற்றை பிடித்து, மாட்டுத் தொழுவத்தில் அடைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில், திருவள்ளூர் சாலையில், சுற்றித்திரிந்த நான்கு மாடுகள் நேற்று பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us