/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
/
10 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
ADDED : டிச 11, 2025 05:46 AM
காஞ்சிபுரம்: காஞ்சி மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, 23வது சுற்றுக்கு முத்துவேடு, சிறுணைபெருகல், புத்தேரி, தண்டலம், சந்தவேலுார், சோகண்டி, வடமங்கலம், பழவேரி, பினாயூர், சாலவாக்கம் ஆகிய 10 ஊராட்சிகளில் நாளை நடைபெறும் சமூக தணிக்கை கிராம சபை கூட்டத்தில், நிறை, குறைகள் பொது மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

