sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளி வேன், தொழிற்சாலை பஸ் மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்

/

பள்ளி வேன், தொழிற்சாலை பஸ் மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்

பள்ளி வேன், தொழிற்சாலை பஸ் மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்

பள்ளி வேன், தொழிற்சாலை பஸ் மோதல் மாணவர்கள், ஊழியர்கள் 43 பேர் காயம்


ADDED : ஜூன் 15, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமத்தில், பள்ளி வேனும், தொழிற்சாலை பேருந்தும் மோதிக் கொண்டதில், மாணவர்கள், ஊழியர்கள் என, 43 பேர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இங்கு பயிலும் மாணவ - மாணவியருக்கு வசதியாக பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதில், 20 மாணவ - மாணவியருடன் நேற்று மாலை 4:30 மணிக்கு புறப்பட்ட பள்ளி வேன், காஞ்சிபுரம் அடுத்த புரிசை கிராமம் நோக்கி சென்ற கொண்டிருந்தது.

அப்போது, ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள, 'பாக்ஸ்கான்' தொழிற்சாலை நிறுவன ஊழியர்களை ஏற்றி வந்த ஒப்பந்த பேருந்தும், பள்ளி வேனும், புரிசை கிராமத்தின் பிரதான சாலையில் மோதிக் கொண்டன.

இதில், பள்ளி மாணவ - மாணவியர் 18 பேரும், கம்பெனி ஊழியர்கள் 25 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்து ஓடி வந்த கிராமவாசிகள், மாணவர்கள், ஊழியர்களை மீட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிலருக்கு லேசான காயமும், பலருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, அங்கு போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

விபத்து நடந்தது பற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர்களிடம் விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மருத்துவமனைக்கு, நேரில் சென்று மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், விபத்து பற்றி விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us