sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சித்தியை வெட்டி கொன்ற வாலிபர் உட்பட 5 பேர் கைது

/

சித்தியை வெட்டி கொன்ற வாலிபர் உட்பட 5 பேர் கைது

சித்தியை வெட்டி கொன்ற வாலிபர் உட்பட 5 பேர் கைது

சித்தியை வெட்டி கொன்ற வாலிபர் உட்பட 5 பேர் கைது


ADDED : ஜூலை 10, 2025 09:00 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, இடப்பிரச்னையில், சித்தியை வெட்டி கொலை செய்த வாலிபர் உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது தம்பி துளசி ராமன். சகோதரர்களான இவர்கள், அதே கிராமத்தில், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இரு குடும்பத்திற்கும் கால்நடைகளுக்கு கொட்டகை அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. நேற்று, காலை 6:00 மணியளவில், மீண்டும் தகராறு ஏற்பட்டு, சுப்பிரமணி மகன் துரை, 31, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து, சித்தி சுமதி, 39, என்பவரை, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.

உறவினர்கள், சுமதியை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமதியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசில், சுமதியின் கணவர் துளசிராமன் அளித்த புகாரின்படி, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், துரை, அவரது தந்தை சுப்பிரமணி, 58, சகோதரர்கள் தனசேகரன், 35, ஸ்ரீதர், 34, தாய் சின்னபொன்னு, 55, ஆகிய ஐந்து பேரையும், நேற்று இந்த வழக்கில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us